எழிலின் காலில் விழுந்து அழும் ஈஸ்வரி பாட்டி… எழில் எடுத்த அதிரடியான முடிவு… பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ இதோ…

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு காரணம் குடும்ப பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்படுகிறது.

   

இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரம் பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் காட்டப்படுகிறது. இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சுசித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மேலும் இந்த தொடரில் நடிகை சுசித்ரா, சதீஷ், ரித்திகா, லட்சுமணன், நேஹாமேனன், ரேஷ்மா போன்றோர்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், பாட்டி ஈஸ்வரி எப்படியாவது எழிலுக்கு பணக்கார பெண்ணான வர்ஷினியை திருமணம் செய்து வைக்க பிளான் போட்டு எழிலின் காலில் விழுந்து அழுகின்றார்.

மனம் பொறுக்காத எழில் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு அமிர்தாவை சந்தித்து உண்மைகளை கூறி அழுது மன்னிப்பு கேட்கின்றார். அமிர்தாவும் அதைக் கேட்டு அழுகின்றார். தற்பொழுது இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதோ இந்த ப்ரோமோ வீடியோ…