‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் கர்ப்பமான முக்கிய பிரபலம்… யார் தெரியுமா?… உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்… 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் முக்கிய நபர் தற்பொழுது கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது பரபரப்பான கதை களத்துடன்விறுவிறுப்பாக ஓடி கொண்டுள்ளது. இந்த சீரியலில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களது சொந்த வீட்டை இழந்து கதிர் முல்லை வசிக்கும் சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். அதேபோல இவர்கள் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறந்தனர்.

   

அந்த கடை மூடப்பட்டு தற்போது பழையபடி அவர்கள் இருந்த பழைய மளிகை கடைக்கு வந்து விட்டனர். இதற்கெல்லாம் காரணம் மீனாவின் தந்தை தான். சமீபத்தில் மீனாவின் தங்கை நிச்சயத்திற்கு சென்று அவமானப்பட்டு  திரும்பினார் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர். தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஹோட்டலையும் அரசாங்க அதிகாரிகள் வந்து சீல் வைத்து விட்டனர்.

இது எதற்காக நடந்தது என்பதை நாம் நாளை ஒளிபரப்பாக உள்ள எபிசோடை பார்த்தால் தான் தெரியும். எந்த சூழ்நிலையிலும் அண்ணன் தம்பிகள் நால்வரும் ஒற்றுமையாக இருப்பதே இந்த சீரியலின் பக்கபலம் .இந்த சீரியல் முக்கியமாக இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறலாம். தற்பொழுது கதிர் முல்லை தம்பதியினர் திருமணம் ஆனதிலிருந்து குழந்தைக்காக ஏங்கி கொண்டிருந்தனர்.

முல்லையால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்பொழுது முல்லை கர்ப்பமாகி உள்ளார் என்ற நல்ல செய்தி வெளியாகியுள்ளது. எத்தனை சோகம் இருந்தாலும் இந்த மகிழ்ச்சியான செய்தியால் மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.