திடீரென உடல் நலக் குறைவால் மரணம் அடைந்த ‘பரியேறும் பெருமாள்’ பட நடிகர்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இத்திரைப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து என பல நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் இந்த சமுதாயத்தில் தலை விரித்தாடும் ஜாதி கொடுமைகளை பற்றி கூறுவதால் தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

   

தற்பொழுது  இத்திரைப்படத்தில் நடித்த ஒரு பிரபலம் இறந்த செய்தி இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான அவர் பெண் தெருக்கூத்து கலைஞராக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான இவர் குடியிருக்க வீடு இல்லாமல், ஓலை குடிசையில் வசித்து வந்த நிலையில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் வீடு கட்டி கொடுத்தது.

இந்நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். தற்பொழுது இவரது மறைவுக்கு திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.