Colombo விற்கு சுற்றுலா சென்ற பிரபல சீரியல் நடிகை ரக்ஷிதா… வைரலாகும் புகைப்படம்…..

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்  நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.

   

இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.

நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

சரவணன் மீனாட்சி தொடரில் சீசனுக்கு சீசன் சரவணன் கதாபாத்திரம் மாறினாலும், மீனாட்சி கதாபாத்திரமானது ரக்ஷிதா மட்டும் மாறாமல் நடித்துக் கொண்டிருந்தார்.

நடிகை மகாலட்சுமி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3யில் நடுவராக இருந்தார்.

பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். ஆனால் ரக்ஷிதாவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

சமீபத்தில் ஒளிபரப்பான சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக ரக்ஷிதா கலந்து கொண்டார்.

இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமையை கொண்டவர்.

நடிகை ரக்ஷிதா பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர் தன் அம்மாவுடன் Colombo வில் இருக்கும்  புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் .இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி  வருகிறது.