புத்தம் புது சீரியலில் கமிட்டான ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ரியா… அதுவும் இந்த சேனலிலா?… வைரலாகும் தகவல்… குஷியில் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ‘ராஜாராணி 2’. ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது மனைவியின் கனவை இனிப்பு கடை நடத்தி வரும் ஹீரோவான கணவர் பல தடைகளை மீறி நிறைவேற்ற போராடுவதே இதன் கதையாகும். இதில் ஹீரோவாக சரவணன் கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார். மற்றும் சந்தியா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக முதலில் ஆலியா மானசா நடித்தார்.

   

ஆனால் அவர் கர்ப்பமான நிலையில் பாதியிலேயே தொடரிலிருந்து விலகினார். அவரை தொடர்ந்து ரியா விஸ்வநாதன் ‘ராஜாராணி 2’ சீரியலில் புதிய சந்தியாவாக நடித்தார். இந்த நிலையில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும் அந்த தொடரில் இருந்து தான் விலகுவதாக ரியா அண்மையில் சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது புதிய சந்தியாவாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கோகுலத்தில் சீதை’ தொடரில் நடித்த ஆஷா கவுடா நடித்து வருகிறார். இந்நிலையில் ரியா தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். ரசிகர்களின் கேள்விக்கு  வீடியோ மூலம் சமீபத்தில் பதிலளித்திருந்தார் நடிகை ரியா.

இந்நிலையில் ரியா விஸ்வநாதன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சீரியலுக்கு ‘சண்டைக்கோழி’ என டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

அத்தோடு ‘இரட்டை ரோஜா’ சீரியலுக்கு பதிலாகத் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வெகுவிரைவில் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.