திருமணத்திற்குப் பிறகு கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றும்…. பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகாவின் க்யூட் புகைப்படங்கள்…

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா.

   

இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர்.

இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரை காதலித்த மிக எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் முடிந்த கையோடு மாலத்தீவுக்கு தனது கணவருடன் ஹனிமூன் சென்று இருந்தார் ரித்திகா.

அங்கு எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

அதே சமயம் திருமணத்திற்கு பிறகு இவர் சீரியலில் இருந்து விலகி விடுவார் என பல செய்திகள் உலா வந்த நிலையில், தற்போது அவர் திருமணத்திற்கு பிறகும் தனது திரை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு ரித்திகா எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.