பிரபல நடிகரை ஜோடியாக சென்று சந்தித்த சூர்யா மற்றும் ஜோதிகா… ஒருவேளை அப்படியா இருக்குமோ?… வைரலாகும் தகவல் இதோ…

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து மலையாள நடிகர் பிரித்விராஜை  சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தற்பொழுது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் வரலாற்று கதை என்பதால் மிகப்பெரிய பட்ஜெட் கொண்டு பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

   

இதைத் தொடர்ந்து அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த படம் ‘தளபதி 67’ திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நிச்சயம் வருவார் என்று ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நடிகர் சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கி அதிலும் வெற்றி கண்டு வருகிறார் நடிகை ஜோதிகா. இவர் தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த ஜோடிகள் இருவரும் மலையாள நடிகர் பிரித்திவிராஜை சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது படு வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இந்த சந்திப்பு தளபதி 67 செட்டில் நடந்ததா?’ என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…