சிறுவன் ஒருவன் மழையில் அழகாக கையை விரித்துக்கொண்டு மழையை ரசித்துக் கொண்டே வண்டியில் செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குழந்தைகள் என்றாலே அதற்கு ஒரு தனி அழகு உண்டு. அவர்கள் எதை செய்தாலும் அது அழகுதான். தற்போது எல்லாம் பெற்றோர்கள் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு குழந்தைகள் எதை செய்தாலும் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அது மட்டும் அல்லாமல் இது போன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு பலரும் காத்திருக்கின்றனர் ஏனென்றால் அவர்கள் செய்யும் சேட்டைகள், மழலை கொஞ்சும் மொழியில் பேசும் அழகு என அனைத்துமே பார்ப்பதற்கு கோடி கண் வேண்டும். தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஒரு சாலையில் தந்தை மழையில் நனைந்தபடி வாகனத்தில் சென்று கொண்டுள்ளார்.
முன் பக்கம் ஒரு மகனும் பின்பக்கம் ஒரு மகனும் அமர்ந்திருக்கிறார். யூனிஃபார்மில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் மழையை ரசித்தபடி கையை விரித்துக்கொண்டு ஆனந்தமாக செல்கிறார். இதை பார்த்த காரில் சென்ற நபர் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram