எங்க அண்ணே…! எங்க அண்ணே…! அன்பை அள்ளித் தெளிக்கிறதில் மன்னன்….. பார்ப்போரை நெகிழ வைக்கும் அண்ணன் தங்கை பாசம்….!!!!

சைக்கிளின் பின்பக்கத்தில் அமர்ந்திருக்கும் தனது தங்கை கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவரது காலை சைக்கிளில் கட்டிக்கொண்டு சிறுவன் அழைத்துச் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அண்ணன் தங்கை பாசம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னதான் வீட்டில் அடித்துக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்தாலும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள். அதை வெளியில் கூறவில்லை என்றாலும் அந்த அன்பு என்பது மிகவும் உன்னதமானதாக இருக்கும். தற்போதயெல்லாம் பல திருமணங்களில் திருமணம் முடிந்து செல்லும் தங்கையையோ அல்லது அக்காவையோ பார்த்து அண்ணன் தம்பி அழுகும் வீடியோக்கள் மனதை நெகிழ வைக்கின்றது.

ஆனால் இந்த வீடியோ சற்று வித்தியாசமானது. சைக்கிளின் பின்பக்கத்தில் அமர்ந்திருக்கும் தனது தங்கை கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக அவரின் கால்களை துணி ஒன்றைக் கொண்டு சைக்கிளுடன் சேர்த்து கட்டி விடுகிறார் அண்ணன். பின்னர் அந்த குழந்தையை அழைத்துச் செல்கிறான். இந்த வீடியோ பார்ப்பவரை நெகிழ வைக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….