நடிகை பிரியதர்ஷினி எதிர்நீச்சல் சீரியலில் விலக போவதாகா இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீரியல்கள் என்றாலே மிகப் பிரபலம் தான். மக்கள் விரும்பும் வகையில் தற்பொழுது போட்டி போட்டுக்கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களை மையப்படுத்தி நிறைய வெற்றிகரமான சீரியல்கள் வெளியாகி உள்ளன. புது புது சீரியல்களை களம் இறக்குவதில் எப்பொழுதும் பிரபல தொலைக்காட்சிகள் போட்டு போட்டுக் கொண்டுதான் வருகின்றன.
அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளன. அப்படி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஹிட் சீரியல்கள் கயல், எதிர்நீச்சல். கயல் சீரியலில் தனது குடும்பத்திற்காக உழைக்கும் பெண்ணின் கதை தத்துரூபமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே தற்போது இந்த சீரியல் டிஆர்பி யில் சன் தொலைக்காட்சியில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதை போல எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம். இந்த தொடரில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு காட்சிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு கொண்டுதான் வருகிறது.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பிரியதர்ஷினி இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல்கள் இணையத்தில் வெளியானது.ஆனால் இத்தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தவறான தகவலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனார்.
View this post on Instagram