ஒரு வீட்டில் நடந்த உண்மை சம்பவம்….. தனியாக இருக்கும் பெண்களே எச்சரிக்கையாக இருங்க….. வைரலாகும் வீடியோ….!!!

வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டியிடம் ஒரு நபர் வீட்டிற்குள் நுழைந்து செயினை திருடி கொண்டு சென்ற சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் ஒரு சில வீடியோக்கள் நமக்கு விழ்ப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோவாகவும் அமைகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

இந்த வீடியோவில் முதலில் வீட்டிற்கு வெளியில் ஒரு நபர் காய் விற்பனை செய்து வந்துள்ளார். அந்த மூதாட்டியும் காயை வாங்குவதற்கு செல்ல பணம் எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்குள் வருகிறார். இதைப் பார்த்த அந்த நபர் திடீரென்று வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு விட்டு பின்னர் வீட்டின் முன் கதவை பூட்டி விடுகிறார். பாட்டி உள்ளே சென்று பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பிய போது அவரின் பின் பக்கம் பிடித்து இழுத்து அவர் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயல்கிறார்.

தற்போது இந்த பாட்டின் கழுத்தில் இருந்த செயினையும் இவர் பறிக்க முயற்சி செய்கிறார். பிறகு அந்த பக்கம் யாரோ ஒருவர் வருகிறார். வந்து கதவைத் திறந்து பார்த்துவிட்டு பின்னர் கதவை பூட்டி விடுகிறார்கள். திருடன் உள்ளேயே மாட்டிக் கொண்டான். அங்கிருந்து அவர்கள் அனைவரும் அவரை கையும் களவுமாக பிடித்து விட்டனர்.  பிறகு பாட்டியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,