இளைஞர் இருவர் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டாண்டு செய்ய முயற்சி செய்தபோது சடனாக பிரேக் போட பின்னாடி வந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இடித்துக் கொண்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய இளைஞர்கள் சற்றும் கவலை இன்றி எங்கு பார்த்தாலும் ஸ்டாண்ட் செய்து வருகிறார்கள். அதிலும் பெண்கள் இருக்கும் இடங்களில் மாஸ் கட்ட வேண்டும் என்பதற்காக வாகனங்களில் வேகமாக செல்வது, வீலிங் செய்வது, பைக்கில் சாகசம் செய்வது போன்றவற்றை செய்து வருகிறார்கள்.
ஒரு சில சமயம் அது அவர்களுக்கே ரிப்பீட் ஆகிவிடும். அவர்கள் பெண்கள் முன்பு விழுந்து வாரி அவமானப்பட்டு போவார்கள். சமீபத்தில் கூட ஒரு இளைஞர் ஸ்டாண்டு செய்ய முயற்சித்த வீடியோ வைரலானத்தை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து போக்குவரத்தை சரி செய்யும் நூதன தண்டனை ஒன்றை வழங்கி இருந்தார்கள். அதேபோன்று தற்போது வாகன நெரிசலான சாலையில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார்கள்.
திடீரென்று சடனாக பிரேக் போட்டு ஒரு வீலை மட்டும் தூக்கம் முயற்சி செய்கிறார்கள். அப்போது பின்னாடி வந்த ஆட்டோ சடனாக பிரேக் போட அதற்கு பின்னாடி வந்த இளைஞர்கள் அதன் மீது மோதி கீழே விழுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வருவதாகி வருகின்றது. இதை பார்த்து பலரும் கண்டித்து வருகிறார்கள்.
View this post on Instagram