அந்த மனசு இருக்கே….! அது தான் சார் கடவுள்….. மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்…. இந்த உலகத்தில்….!!!!

தெருவில் ஒரு நாய் இறந்துவிட்டது என்று நினைத்து அந்த பக்கம் இருந்த நபர்கள் அனைவரும் அதனை கண்டுகொள்ளாமல் வாகனத்தில் சென்ற நிலையில் ஒருவர் மற்றும் அதனை மீட்டு காப்பாற்றிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இன்றைய தலைமுறையினரிடம் மனிதாபிமானம் என்பது இல்லை என்று கூறி வருகிறார்கள். அதெல்லாம் உண்மை கிடையாது. அதாவது மக்கள் அனைவரும் தங்களது வேலைகளில் மிகவும் பிசியாக இருக்கிறார்கள்.

   

அவரவர் வேலைகளை பார்ப்பதற்கு நேரமில்லாமல் தவிர்த்து வருகிறார்கள். இதில் எங்கிருந்து மற்றவர்களுக்கு உதவி செய்வது, இருப்பினும் இங்கு இருக்கும் நபர்கள் பலரும் விலங்குகள் மனிதர்கள் என அனைவருக்கும் உதவி செய்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களை நாம் நிறையவே பார்த்திருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஒரு ஹைவே ரோட்டில் ஒரு நாய் படுத்து கொண்டிருக்கின்றது, அந்தப் பக்கம் அனைத்து வாகனங்களும் அந்த நாயை கண்டுகொள்ளாமல் அதிவேகமாக சென்று இருக்கிறார்கள். ஆனால் எந்த பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் வாகனத்தை நிறுத்தி அந்த நாய்க்கு உயிர் இருக்கின்றதா? என்பதை சோதிக்கிறார்கள். ஆனால் அந்த நாய் உண்மையில் உயிருடன் தான் இருக்கின்றது. பின்னர் அதனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி அந்த நாயை உயிர்பிக்க செய்துள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by KARTAVYA SOCIETY (@kartavyasociety)