‘எப்போது? எப்படி? குழந்தை பெறுவது என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்’…. விஜே ரம்யா ஓபன் டாக்… அப்புறம் என்ன சொன்னாங்க தெரியுமா?…

தனது சொந்த வாழ்க்கை குறித்த பல தகவல்களை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் முன்னணி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் ரம்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

   

இவருடைய நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்பொழுது இவர் தனியார் நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இதை தாண்டி ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இறுதியாக விஜயின் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை. கணவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில், ரம்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘திருமணம் என்பது அனைவருக்கும் முக்கியமானதுதான்.

ஆனால் அதுவே வாழ்க்கையின் துவக்கமும் முடிவும் இல்லை. திருமணம் செய்துக் கொள்வதையும் குழந்தை பெற்றுக் கொள்வதையும் மற்றவர் விருப்பத்திற்காக நாம் செய்யக் கூடாது. நம்முடைய விருப்பப்படிதான் அமைய வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளலாமா அல்லது வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்பதையும் நாம்தான் தீர்மானம் செய்ய வேண்டும்’ என ‘மனம் திறந்து கூறியுள்ளார்.