‘இனிமேல் நான் யாருன்னு காட்டுறேன்’… சபதத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய ஜான்சி ராணி… அனல் பறக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் ப்ரோமோ உள்ளே…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் குடும்பப் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது ‘எதிர்நீச்சல்’. நாளுக்கு நாள் டிஆர்பியில் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த சீரியல்.

   

நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து ப்ரோமோ வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் ஜான்சி ராணியை கதிர் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறான்.

வீட்டை விட்டு வெளியே வந்த ஜான்சி ராணி ‘இனி இந்த ஜான்சி ராணி யாருன்னு இவங்களுக்கு காட்டுறேன்? இந்த வீட்டில இனிமே அலறல் சத்தம் மட்டும்தான் கேட்கணும்’ என கோபமாக பேசுகிறார். அதன் பிறகு அப்பத்தா குணசேகரனை அழைத்து ‘உடனே இந்த கல்யாணத்தை நிறுத்து’ என சொல்ல ‘அதற்கு என்ன பண்ணனும்?’ என கேட்கிறார்.

அதற்கு குணசேகரன் ‘என்ன செய்யணும்னு உனக்கே தெரியும்’ என கூறுகிறார். அந்த 40 சதவீதம் ஷேர் குறித்து மறைமுகமாக பேசுகிறார். இதனால் இன்றைய எபிசோடும் அனல் பறக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ….