பாம்பை பார்த்தா படையே நடுங்கும்…. சும்மாவா சொல்லி இருக்காங்க…. ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய மாணவர்…. வைரல் வீடியோ….!!!!

ஒரு இளைஞரை பாம்பு கடிக்க முற்பட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் இணையதளம் அதிக அளவில் வளர்ந்து வருகின்றது. சமூக வலைதள பக்கங்களில் மக்கள் அதிக அளவில் நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். அதில் பல வீடியோக்களை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வீடியோவும் நமக்கு ஒரு சில தாக்கத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் நம்மை மகிழ்ச்சியில் வாழ்த்துகின்றது.

   

அதுவும் செல்லப்பிராணிகள் செய்யும் அட்ராசிட்டிகளை நாம் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் வீட்டின் கேட்டுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவர் மற்றொரு மாணவருடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். பேசி முடித்துவிட்டு கேட்டை திறந்து உள்ளே வரும்போது அந்த இடத்தில் ஒரு பாம்பு இருக்கின்றது.

அது அவரை கடிக்க முற்படுகின்றது. இதை பார்த்து பயந்து அந்த மாணவன் பின்னே சென்று விடுகிறார். பிறகு அந்த இடத்தில் இருந்து பலரையும் அழைக்கின்றார். இங்கே வாருங்கள் ஒரு பாம்பு உள்ளது என்று கூப்பிடுகிறார்.  அப்போது வீட்டிற்குள் இருந்து அவரது தாயை அழைத்து வருகிறார். பின்னர் அந்த பாம்பு மெதுவாக அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….