ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை லட்சுமி மேனன்… அவரா இது?… புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளத்து பைங்கிளியான நடிகை லட்சுமி மேனன்.

   

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய இந்த படத்தில், சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன்.  முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பாவாடை தாவணியில் தோன்றி, தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் லட்சுமி மேனன்.

மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ’கும்கி’,  ’பாண்டியநாடு’,  ’ஜிகர்தண்டா’,  ’மஞ்சப்பை’ போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.

இவர் இறுதியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘புலிகுத்திபாண்டியன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு இழந்து காணப்பட்டார் லட்சுமி மேனன்.

தற்போது பட  வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கும் திரைப்படம் ஒன்றில் யோகி பாபுவும் லட்சுமி மேனனும் காதலராக நடிக்க உள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து ஏஜிபி என்ற படத்தில் நடித்தார். தற்போது இவர் வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சந்திரமுகி 2 பட குழுவினருடன் நடிகை லட்சுமி மேனன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை லட்சுமி மேனனா இது? ஆள் அடையாளம் தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….