என்ன தொழில் பண்றீங்கன்னு கேக்குறாங்க?… தப்பான வழியில் சம்பாதிக்கிறோமா?… கோபத்தில் கத்திய தாடி பாலாஜி மனைவி… படுவைரலாகும் வீடியோ இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் தாடி பாலாஜி .நடிகர் தாடி பாலாஜி நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருவருக்கும் இடையை ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்கின்றனர்.

   

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மாதவரம் அடுத்து பொன்னியம்மன்மேடு சாஸ்திரி மாதவரம் நகரில் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவரின் காரை சேதப்படுத்தியதாகக் கூறி  போலீசார்  நித்யாவை கைது செய்து பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா தன் மீது எந்தவிதமான தவறும் இல்லை எனவும் மாதவரம் போலீசார் தன்னை பழி வாங்குவதாகவும் கூறி, மாதவரம் போலீசார் மீதும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் ஒரு சிங்கிள் பேரண்டாக தனியாக வசித்து வருவதால் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும் வேண்டுமென்றே தன் மீது புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த பேட்டியில்,

‘கடந்த 14 ஆம் தேதி இரவு தான் துணிவு படம் பார்த்துவிட்டு வந்தபோது தனது கார் சாவி காணாமல் போனதாகவும், அதனால் அவர் கார் அருகே சென்று தனது கார் சாவியை தேடியதாகவும் தெரிவித்தார். எதிர் வீட்டில் வசிக்கும் மணி குடும்பத்தினருக்கும் தனக்கும் கார் பார்க்கிங் பிரச்னை இருந்து வந்ததால், அவர்கள் தன்னை அசிங்கமாக பேசி அடிக்கடி சண்டைக்கு வந்ததாகவும், இந்த நிலையில் அவர்கள் வீட்டின் அருகே தான் சென்றதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காவல் நிலையத்தில் காரை சேதப்படுத்தியதாக புகார் கொடுத்ததாகவும்’ கூறியுள்ளார் நித்யா.

மேலும் அவர் கூறும்பொழுது, ‘என்ன தொழில் பண்றீங்கன்னு கேக்குறாங்க? தப்பான வழியில் சம்பாதிக்கிறோமா? ‘ என்று கூறி தனது கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…