விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் தனது கனவுகளை திருமணத்திற்கு பின் நிறைவேற்ற துடிக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றி அழகாக கூறி வருகிறார் இயக்குனர். இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.
தற்பொழுது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் மாமியாராக, சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருபவர் நடிகை பிரவீனா நாயர். இவர் தனது 18 வயதில் சினிமா பயணத்தை தொடங்கியவர். 30 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டுள்ளார். மலையாளத்தில் ‘கௌரி’ என்ற திரைப்படம் படம் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய் டிவி, சன் டிவி என தற்போது பல சின்னத்திரை சீரியல்களில் கலக்கி கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்பொழுது அவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ராஜா ராணி 2 சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையா இவர்?’ ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்….