ஒரு ரூபாய் கூட இல்லாத முதலமைச்சர்.. உலக கண்காட்சியில் நேரு செய்த நெகிழ்ச்சி சம்பவம்..

கர்மவீரர் காமராஜர் குறித்து நாம் பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். அதில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று தெரிய வந்திருக்கிறது. கடந்த 1960 ஆம் வருடத்தில் டெல்லியில் மிகப்பெரிய உலக கண்காட்சி நடந்திருக்கிறது. அந்த கண்காட்சியில், அப்போது யாருமே பார்த்திருக்காத பல வகையான பொருட்கள், ராட்டினம் என்று நிறைய இருந்திருக்கிறது.

   

நம் நாட்டின் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று மகிழ்ச்சியாக ராட்டினம் உட்பட பல விஷயங்களை கண்டு கழித்துள்ளனர். அப்போது ஒரு முதலமைச்சர் மட்டும் எல்லா விஷயங்களிலிருந்தும் ஒதுங்கியே நின்று இருக்கிறார்.

காசு போட்டால் எடை பார்க்கும் மெஷின் மீது ஏறி ஒவ்வொருவராக எடை பார்த்தபோதும் அவர் தள்ளியே நின்றிருக்கிறார். அதன் பிறகு, பிரதமர் ஜவஹர்லால் நேரு நான் உங்களுக்கு காசு போடுகிறேன், வந்து பாருங்கள் என்று கூறிய பிறகு வந்திருக்கிறார். அவர் தான் கர்ம வீரர் காமராசர் அவர்கள். அந்த சமயத்தில் சில்லறை  கூட கையில் இல்லாமல் இருந்த ஒரே முதலமைச்சர் காமராஜர் தான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.