‘மானாட மயிலாட’ கோகுல் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?.. வைரலாகும் புகைப்படம்..

பிரபலமான தனியார் தொலைக்காட்சியான கலைஞர் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான நிகழ்ச்சி  ‘மானாட மயிலாட’.

   

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் பிரபலமானவர் கோகுல். இவர் ஆரம்பத்தில் மைமிங் கலைஞராக மட்டும் இருந்து வந்தார்.

 

இவரது திறமையைப் பார்த்த பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் இந்நிகழ்ச்சியில் கோகுலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

இவர் தன்னுடைய நடன திறமையாலும் வித்தியாசமான  வித்தைகள் மூலமாக ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

கோகுல் நடனம் மட்டுமின்றி ஜிம்னாஸ்டிக் ,பிட்னஸ், ஸ்போர்ட் ,பேலன்ஸிங் போன்ற பல்வேறு திறமைகளை கொண்டவர்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும், நாளை இயக்குனர் நிகழ்ச்சிகளும் பங்கு பெற்றார்.

இவர் முதன் முதலில் ‘அம்புலி’ என்ற திரைப்படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தில் மிருகமாக நடித்திருப்பவர் கோகுல்.  இவர் தமிழில் மகளிர் மட்டும், ஐரா, ஐம்புலிங்கம் 3d போன்ற  படங்களின் நடித்துள்ளார்.

கோகுல்  லோகேஸ்வரி என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது கோகுல் ‘Guta’ என்ற டேலண்ட் அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார்.
இதில்  பள்ளியில் சிறுவர்களின் தனித்திறமையை கண்டு அவர்கள் அதில்  சிறப்பாக விளங்க பயிற்சி அளிக்கிறார்.

இவர் 4 கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார். மேலும், இவரது பள்ளி மாணவர்களும் பல கின்னஸ் சாதனைகளை செய்துள்னனர்.இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.