நம்ம சந்தோஷம் நமக்கு முக்கியம்….. அதுக்கு பலரும் தேவை கிடையாது….. மகிழ்ச்சியின் விலை…. வைரலாகும் வீடியோ….!!!!

திருமணம் முடிந்து ஒரு மணமக்கள் தனியாக வாகனத்தில் இருவர் மற்றும் செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் தற்போது திருமணம் பெரும்பாலும் காதல் திருமணமாகத்தான் இருக்கின்றது. ஒருவரை ஒருவர் பார்த்து, பிடித்து, காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்களது திருமணங்களை தாங்களே முடிவு செய்து கொள்கிறார்கள்.

   

தங்களுக்கு பிடித்த வாழ்க்கை துணையை அவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள். இதுதான் தற்போது நிலவரமாக உள்ளது. ஆனால் முன்பெல்லாம் பெரியோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் அதிக அளவில் இருந்தது. அதையும் தாண்டி திருமணம் என்பது உற்றார் உறவினர் சூழ நடப்பது. திருமணம் முடிந்து மணமக்களை வாகனத்தில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அழைத்துச் செல்வதை நாம் பார்த்திருப்போம்.

 

ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக யாருமே இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் மாப்பிள்ளை மற்றும் பொன் இருவரும் தனியாக சென்று கொண்டிருக்கிறார்கள். இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்தனர். இதை பார்த்த பலரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் இருந்தால் போதும் என்று கூறி வருகிறார்கள். மேலும் அவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.  இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது,