பாடகர் கார்த்தியின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்…

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி பாடகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பாடகர் கார்த்தி. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானிடம் பணிபுரிந்து வந்த இவர் பிறகு அவரை இசையில் பல பாடல்களைப் பாட தொடங்கினார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

   

கிட்டத்தட்ட 15 மொழிகளில் இதுவரை 8,000 மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். குறிப்பாக பாய்ஸ் திரைப்படத்தில் இவர் பாடிய எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட், கஜினியில் ஒரு மாலை, வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அவர் என்ன போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களின் க்யூட்டான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.