கீழ கிடந்துச்சி அதை எடுத்துட்டு வந்தேன்….. சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையை அழுக வைத்த தந்தை….. வைரலாகும் வீடியோ….!!!!

சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையை அவரின் தந்தை கேலி செய்து அழவைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குழந்தைகளின் அட்ராசிட்டி தான் சமூக வலைதளங்களில் அதிக அளவில் இடம் பெறுகின்றது என்று தான் கூற வேண்டும்.

   

தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான விஷயங்களை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். இதன் மூலம் சில வீடியோக்கள் டிரண்டாகி விடுகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் குழந்தை ஒன்று மாம்பழத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது .

அதை பார்த்த அவரது தந்தை மாம்பழம் நன்றாக உள்ளதா சூப்பராக உள்ளதா என்று கேட்க நன்றாக உள்ளது என்று கூறிய குழந்தை மரத்திலிருந்து பறித்து வந்தீர்களா என்று கேட்க இல்லை ரோட்டில் கிடந்தது அதனை எடுத்து வந்தேன். மேலும் அந்த பழத்தின் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது அந்த பழத்தை தான் நீ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய் என்று கூற குழந்தை அழுக தொடங்கி விட்டது. இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…