மறுமணம் குறித்து மனம் திறந்த ‘வீட்ல விசேஷங்க’ பட நடிகை… அவரே கூறிய வைரல் தகவல் இதோ…

நடிகை பிரகதி தற்பொழுது பேட்டி ஒன்றில் மறுமணம் குறித்து கூறிய விளக்கம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமாவுலகில் தற்பொழுது அம்மா மற்றும் சித்தி கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது மனதையும் கொள்ளை அடித்துச் சென்றவர் நடிகை பிரகதி. இவர் 1994 ல் தமிழ் சினிமாவில் வெளிவந்த ‘வீட்டில் விசேஷங்க’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறப்பாக நடித்து வந்தாலும் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் தவித்தார்.

   

தற்பொழுது இவர் சீரியலின் பக்கம் சென்று நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தாலும் அதனையும் ஏற்று நடித்துக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரகதி தனது ரசிகர்களுடன் உரையாடுவது ,புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது என எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பார்.

அவ்வப்பொழுது வீடியோக்கள்  வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார் நடிகை பிரகதி. இவரின் சொந்த வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது இவர் தன்னுடைய 20 வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு அழகான இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஒரு சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதை தொடர்ந்து தனி ஒருவராக நின்று போராடி இரண்டு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார் நடிகை பிரகதி. சமீபத்தில் இவர் தனது மறுமணம் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

‘நான் கணவரை விட்டு பிரிந்த போது எனக்கு ஆறுதல் கூற, அரவணைத்து வழி நடித்த, ஒரு விஸ்வாசமான நண்பனாக இருக்க ஒரு உறவு தேவைப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட ஒருவரை நான் சரியான நேரத்தில் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

ஆனால், இப்போ எனக்கு 47 வயதாகி விட்டது இப்போது மறுமணத்தை பற்றி என்னால் யோசித்து  கூட பார்க்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் தனிமையில் இருந்து விட்டேன். இதற்கு மேல் ஒரு துணையை தேடுவது என்பது சரியாக இருக்காது.அத்தோடு  சில சிக்கல்கள் வரும் போது, நான் மிகவும் பிடிவாதமாக இருந்து சமாளித்து அதில் இருந்து மீண்டு இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது நடிகை பிரகதியின் இந்த பேட்டி வைரலாக்கப்பட்டு வருகிறது.