தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஹீரோ தான் நடிகர் விஜய், தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் நேற்றைய முன்தினம் வெளியாகி ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தனியார் youtube சேனலில் பேட்டி அளித்துள்ளார் அதில் ‘கோட்’படத்தைப் பற்றி ஒரு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னை சந்தித்ததாகவும் ,
அப்போது வெங்கட் பிரபு விஜயகாந்த் சாரை கோட் படத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் மூலமா ஒரு சீன்ல கொண்டு வர போகிறோம் உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்காக நான்கு முறை வீட்டிற்கு வந்து சென்றார். நடிகர் விஜய்யும் என்னை சந்திக்க உள்ளதாகவும் ஷூட்டிங்கில் இருப்பதால் வர முடியவில்லை என அந்த அப்டேட்டியில் கூறியுள்ளார்.