‘எதிர்நீச்சல்’ சீரியல் ஹரிப்ரியாவின் நிஜவாழக்கையில் இத்தனை சோகங்களா?… பலரும் அறிந்திடாத தகவல்கள் இதோ…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியல் குடும்பப் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பல ஆயிரக்கணக்கான இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது ‘எதிர்நீச்சல்’. நாளுக்கு நாள் டிஆர்பியில் முன்னேறிக் கொண்டு வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

   

கோலங்கள் சீரியலை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு காரணம் இவர் தனது சீரியலை ரசித்து ஆத்மார்த்தமாக எடுப்பதுதான்.

இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

இந்த சீரியலில் நந்தினி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் தான் ஹரிபிரியா. இவர் ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.

 

இதைத்தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள், கண்மணி என பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ஹரிப்ரியா  2012ல்  சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஹரிப்ரியாவுக்கு  ஒரு மகனும் உள்ளார்.

பின் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த ஹரிபிரியா தொகுப்பாளர் அசாருடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

‘அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசுவது எனது பிறப்புரிமை, தவறு என்னுடையது இல்லை, பார்ப்பவர்களிடம் தான்’ என அந்த காதல் கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவ்வாறு நிஜ வாழ்க்கையில் பல போராட்டங்களையும் சோகங்களையும் கடந்து நடிகை  ஹரிபிரியா மற்ற பெண்களுக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து கொண்டுள்ளார்.