‘ராஜா ராணி 2’ சீரியலின் சந்தியா கதாபாத்திரத்திலிருந்து விலக முக்கிய காரணம் இதுதான்… நடிகை ரியா ஓபன் டாக்… வைரலாகும் வீடியோ உள்ளே…

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி’. இந்த சீரியலில் முதல் பாகத்தில் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஹீரோ ஹீரோயின்களாக நடித்து அசத்தி இருந்தனர். இந்த சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ராஜா ராணி 2’ சீரியல் எடுக்கப்பட்டது.

   

இந்த சீரியலில் மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் எப்படி தன்னுடைய பிரச்சினைகளை தகர்த்து ஐபிஎஸ் அதிகாரியாக தனது இலட்சியத்தை அடைய போராடுகிறார் என்பதை சீரியலின் இயக்குனர் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

மேலும் இந்த சீரியலை விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலை இயக்கி வரும் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். தற்பொழுது இந்த சீரியல் முதலில் கதாபாத்திரத்தில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்துக் கொண்டு வந்தார்.

இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது கர்ப்பமானதால் சீரியலை விட்டு உடனடியாக விலகினார். இவரை தொடர்ந்து சந்தியா கதாபாத்திரத்தில் ரியா விஸ்வநாதன் களமிறங்கினார். ஆரம்பத்தில் இவர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படவில்லை.

ஆனால் தற்பொழுது இவர் தனது நடிப்பு திறமையால் வெகுவாக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில்  திடீரென இவர் ராஜா ராணி 2 சீரியல் விட்டு காரணம் எதுவும் கூறாமல் விலகி விட்டார்.

இதைத்தொடர்ந்து சந்தியா கதாபாத்திரத்தில் மற்றொரு பிரபல சீரியல் நடிகை தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ரியா விஸ்வநாதன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு, தான் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலக்கியதற்கான உண்மை காரணம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது.

இதோ அவரின் வைரல் நேர்காணல் வீடியோ…