நடிகை சினேகா தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் ‘ஆனந்தம்’ திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம், விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா. இவர்களுக்கு தற்பொழுது ஆத்யந்தா, விகான் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சினேகா.
இவர் அவ்வப்பொழுது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதேபோல தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வும் நடந்தாலும், அதை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார் நடிகை சினேகா.
அந்த வகையில் தற்பொழுது நடிகை சினேகா தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘எவ்வளவு க்யூட்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ….
View this post on Instagram
View this post on Instagram