திடீரென பழனி முருகனை தரிசிக்க சென்ற நடிகை வனிதா விஜயகுமார்… இதுதான் காரணமா?… அவரே வெளியிட்ட வைரல் புகைப்படங்கள் இதோ…

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்றே கூறலாம். குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார்.

   

இதையெல்லாம் கடந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் சூப்பர் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சமையலில் கை தேர்ந்தவரான நடிகை வனிதா குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஆனார். இதைத் தொடர்ந்து அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி  அதில் சமையல், மேக் டிப்ஸ் குறித்த விடீயோக்களை பதிவிட்டு வருகிறார்.

இதற்கிடையில் யூடியூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் கைக்கொடுக்காததால் தற்போது 2 மகள்களுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.

தற்பொழுது இவர் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் ராதாரவியுடன் கொடைக்கானலில் புதிய படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டார்.

தொடர்ந்து அதிரடியாக பல கருத்துக்களை கூறி தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார் வனிதா விஜயகுமார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வனிதா.

தற்போது நடிகை வனிதா  பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை  தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் ‘அம்மாவும் நீயே ,அப்பாவும் நீயே என்று கேப்ஷனும் இட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது படுவைரலாகி  வருகிறது.