பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத முக்கிய போட்டியாளர்… இதுதான் காரணமா?…. வைரலாகும் தகவல் இதோ…

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிந்த ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஐந்து சீசன்களை கடந்து சமீபத்தில் ஆறாவது சீசனும்  நிறைவடைந்தது.

   

அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட, இந்த ஆறாவது சீசன் பரபரப்பாகவும், விறுவிறுப்பபாகவும், சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்தது என்று கூறலாம்.

இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் வாரம் ஒரு போட்டியாளர் என வெளியேறி அசிம், விக்ரமன், சிவின் மூவரும் இறுதி  போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் விக்ரமன், ஷிவின் இருவரில் ஒருவர் தான் டைட்டிலை வெல்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசிம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு விஜய் தொலைக்காட்சியை எதிர்த்து ரசிகர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

ஒவ்வொரு சீசன் நிறைவிற்கு பின்னரும் பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும். அதுபோல இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் நிறைவை தொடர்ந்து, தற்பொழுது பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதில் மாடல் அழகியான நிவாஷினி மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது அசல் கோளாறுடன் சில சர்ச்சைகளை சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

இவரை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இவர் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவரது பட வாய்ப்பாக  இருக்கலாம் என்று கருதப்படுகிறது.