‘துள்ளாத மனமும் துள்ளும்’ திரைப்படத்தில் விஜய், சிம்ரனுக்கு பதிலாக நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகர் மற்றும் நடிகையா?… தீயாய் பரவும் தகவல் இதோ…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ரிலீசான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும்,  வசூலில் சாதனையும் படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

   

நடிகர் விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் இன்றும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இவருடைய ஹிட் படங்கள் என்று எடுத்துக் கொண்டாலே நம் கண் முன்னே முதலில் நிற்பது அவருடைய காதல் திரைப்படங்கள் தான்.

அதில் ஒன்றுதான் துள்ளாத மனமும் துள்ளும். 1999 ல் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.  இத்திரைப்படத்தில் இயக்குனர் எழில் அருமையான காதல் கதையை கொடுத்திருப்பார்.

இத்திரைப்படத்தின் பெயர் முதலில் ருக்மணிக்காக. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்று மாற்றினார். தற்பொழுது இத்திரைப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் இயக்குனர் கமிட் செய்தது முரளி மற்றும் ரம்பாவை தானாம். ஆனால் ஒரு சில காரணங்களால் இவர்கள் தவிர்க்கப்பட்டு, விஜய் மற்றும் சிம்ரன் இருவரும் நடித்துள்ளனர்.