ரசிகர்களுக்கு தனது திருமண நாளில் குட் நியூஸ் கூறிய ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை… அட இவரா?… வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்…

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ஹிட் கொடுத்த சீரியல்களில் ஒன்று ‘செம்பருத்தி’. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னால் தான் நிறைவடைந்தது. ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து, டாப் சீரியலாக விளங்கி, முன்னணி இடத்தை பிடித்தது.

   

இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷபானா. இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த சீரியலில் நடித்த பல பிரபலங்கள் தற்பொழுது புதுப்புது சீரியல்களை கமிட்டாகி நடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் மித்ரா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தவர் நடிகை பாரதி நாயுடு.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் முதன்  முதலில் போட்டியாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து ‘தேவதையை கண்டேன்’ என்கிற சீரியலில் நடித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் ‘செம்பருத்தி’ சீரியலில் மித்ராவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பாரதி நாயுடு.

அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் தனது மூன்றாவது திருமண நாளன்று, தான் கர்ப்பமாக இருப்பதாக, கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.