10 வருடங்களாக வனவாசம்.. ஆனந்த் அம்பானிக்கு ஏன் அங்கு கல்யாணம் நடந்தது தெரியுமா..?

முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது குறித்து தான் இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டது. இந்த திருமணத்தில், உலகம் முழுவதும் உள்ள பல விஐபிகளும், விவிஐபிக்களும் பங்கேற்றார்கள்.

   

அது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி இணையத்தை கலக்கியது. இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஆனந்த் அம்பானி பற்றி சுவாரஸ்ய தகவல்  ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, குஜராத்தில் உள்ள ஜாம்நகருக்கு அருகில் 3000 ஏக்கர் பரப்பளவில் இயற்கையாக காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதற்கு 20 வருடங்கள் ஆனது.

காடுகளில் வளர்க்கப்படும் மரங்கள் அனைத்தையும் நட்டு தண்ணீர் ஊற்றி வளர வைத்துள்ளனர். 10 வருடங்களாக ஆனந்த் அம்பானி அந்த காட்டில் தான் அதிக நேரம் இருந்திருக்கிறார். அரசாங்கத்தின் அனுமதியோடு, உலகில் உள்ள அனைத்து விலங்குகளையும் அங்கு கொண்டு வந்துள்ளனர். அவருக்கு அந்த காடு மிகவும் நெருக்கமானது. அதனால் தான் அங்கு அவருக்கு திருமணம் நடந்தது என செய்யாறு பாலு கூறியுள்ளார்.