‘முந்தானை முடிச்சு’ பட டீச்சரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?… அவரின் கணவர் இவர்தானா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ…

இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘முந்தானை முடிச்சு’ படத்தில் நடித்த டீச்சரின் தற்போதைய புகைப்படமும், அவரது கணவரின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனரும் நடிகருமான கே பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தீபா மேரி. இவர் கமலஹாசன் நடித்த ‘அந்தரங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் ரஜினியின் ‘ஜானி’, கமலஹாசனின் ‘உல்லாச பறவைகள்’, சிவகுமாரின் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இருப்பினும் இவரை ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பட்டு டீச்சர் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியது. இவர் இறுதியாக 1992ல் வெளியான ‘பட்டத்து ராணி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தோடு திரையுலகை விட்டு விலகிய இவர் ரிஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நிர்மல் என்ற மகன் உள்ளார். இவர் தனது மகனுக்கும் திருமணம் செய்து வைத்து பேரனும் எடுத்துள்ளார். தற்பொழுது 50 வயதை கடந்த நடிகை தீபா மேரி தனது பேரன், பேத்திகள் என குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்களும் மற்றும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.