சினிமாவில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் வருபவர்களை நாம் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விடுவதில்லை. அதுபோல 2010ல் வெளியான ‘மைனா’ திரைப்படத்தில் சுதா பாஸ்கர் என்ற போலீசுக்கு மனைவியாக நடித்திருந்தவர் நடிகை சூசன் ஜார்ஜ். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
இத்திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சூசன் ஜார்ஜ். இதைத் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது. அந்த வகையில் இவர் நண்பேண்டா, அர்ஜுனன், என் காதலி, ரா ரா நர்த்தகி, ராட்சசன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சுழியம், ரோஜாக்கூட்டம், தென்றல், அத்திப்பூக்கள் ,தியாகம், சரவணன் மீனாட்சி உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார். இவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய பொழுது, ‘படத்துக்கு மட்டும் தான் நான் அந்த மாதிரி. நிஜத்தில் நான் ரொம்ப அமைதியான ஆள். படத்தில் என்னை பார்த்த பலரும் நீங்க ஒரு rugged girl என்றும், சரக்கு அடிச்சிட்டு தான் நீங்க நடிக்கிறீங்க’ என்றும் கேவலமாக பேசினார்.
இதையெல்லாம் கேட்க ஒரு கட்டத்தில் ரொம்ப வேதனையாக இருக்கும். ஆனால் இதெல்லாம் படத்திற்காக மட்டும்தான். என்னை நானே தேற்றிக் கொள்வேன். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதற்காக தான் நடித்துக் கொண்டு வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.