நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினிக்காக செய்த அந்த விஷயம்… ‘இது போல யாருமே செய்ய முடியாது’… சக நடிகரின் வைரல் பேட்டி இதோ….

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘துணிவு ‘ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூல் சாதனையும் படைத்து வருகிறது. நடிகர் அஜித் நடிகை ஷாலினியை 2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

   

நடிகர் அஜித் எப்பொழுதும் தனது குடும்பத்தின் மீது கவனம் அதிகம் செலுத்தக் கூடியவர். தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக அதிக நேரத்தை செலவிடுபவர். ஷூட்டிங் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தனது குடும்பத்துடன் அதிகம் இருப்பார் . தற்பொழுது நடிகர் அஜித்துடன் துணிவு திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகர் பிரேம் சில நெகிழ்ச்சியான தருணங்களை பேட்டி ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ‘நடிகர் சங்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்த அஜித்தை பார்க்க பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்பொழுது காரை விட்டு இறங்கிய நடிகர் அஜித் அந்தப் பக்கமாக சென்று, மனைவிக்காக காரை திறந்து கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம். இது போன்று தற்பொழுது பலரும் செய்வது கிடையாது.

அதேபோல என்னுடைய மனைவி ஒருநாள் அஜித்தை பார்ப்பதற்காக வெளியில் இருந்து வருவதாக சொன்னார். அப்பொழுது நான் அவரிடம் கூறிய போது,  ‘எப்ப வருவாங்க? பத்திரமா வருவாங்களா?’ என்று அடிக்கடி  வந்து கேட்டார். இதெல்லாம் நினைச்சு பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உண்மையிலேயே நடிகர் அஜித் சாரை போல யாரும் இவ்வளவு கேர் பண்ண முடியாது’ என்று மகிழ்ச்சியோடு கூறினார்.