நாடோடிகள் பட நடிகரின் மகன் திருமணம்… கலந்து கொண்டு வாழ்த்து சென்ற பிரபலங்கள்… வைரல் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் சமுத்திரக்கனி. இவர் ஒரு சிறந்த இயக்குனர் ஆவார்.

   

இவரது இயக்கத்தில் பல திரைப்படங்கள் சமுதாய சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகி உள்ளது. இவருடைய இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் நாடோடி.

குடும்ப வாழ்க்கையையும், நட்பையும், காதலையும் அழகாக கூறும் ஒரு படைப்புதான் இந்த திரைப்படம். நட்புக்காக ஒரு திரைப்படம் என்றால் அதில் முன்னிலை வகுப்பது நாடோடிகள் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் சசிகுமார், கஞ்சா கருப்பு, பரணி, வசந்த், அனன்யா, அபிநயா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் பரணி அவர்களின் தந்தையாக நடித்திருந்தவர் தான் வி கே விஜயகுமார்.

அந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் இவர் நடித்து வருகிறார்.

நேற்று இவருடைய மகன் திரு வி பிரபு அவர்களுக்கும் ப்ரீத்தி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் சமுத்திரகனி, பரணி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.