பிக் பாஸ் வீட்டை விட்டு இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்… இதுதான் காரணமா?… ஷாக்கான ரசிகர்கள்…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தற்பொழுது வெளியேற்றப்பட்டுள்ள முக்கிய போட்டியாளர் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் இறுதி கட்டத்தை எட்டி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. விஜய் தொலைக்காட்சி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆறு வருடங்களாக ஒளி பரப்பி வருகின்றது. இதற்கு முன்னரே ஹிந்தி தொலைக்காட்சியில் இது 15 சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

   

இதை தொடர்ந்து தமிழில் விஜய் தொலைக்காட்சி தற்போது 6 சீசன்களை வெற்றிகரமாக முடிக்க உள்ளது. இந்த பிக் பாஸ் 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இன்னும் ஒரு சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ளது. பிரம்மாண்டமான பிக் பாஸ் ‘கிராண்ட் பினாலே’ நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் டைட்டிலை வெல்லப் போவது யார் என்பதை அறியவும் மக்கள் மத்தியில் ஆர்வம் பெருகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 21 போட்டியாளர்கள்களமிறக்கப்பட்டனர். இவர்களில்  மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகள் பெற்று ஒவ்வொரு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு கொண்டே வந்தனர்.

அந்த வகையில் தற்போது இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு மைனா நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாள் தாமதமாக நுழைந்தார் தற்பொழுது கடைசியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.தற்பொழுது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்நிலையில் மைனா நந்தினியின் மொத்த சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பொருத்து பார்க்கும் பொழுது பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை சம்பளமாக இவருக்கு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.