விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. இந்த சீரியல் ஆரம்பித்த நாட்களில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலில் அருண் மற்றும் ரோஷினி ஹீரோ ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தனர். மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற இந்த சீரியல் நடுவில் கொஞ்சம் பின்வாங்கியது .
சீரியலின் கதை இலுவாய் இழுக்க, ‘எப்பொழுதுதான் சீரியலை முடிப்பீர்கள்?’ என்று ரசிகர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். சமீபத்தில் கூட இவர்கள் 1000 எபிசொட் நிறைவை கொண்டாடினார்கள். இதனைதொடர்ந்து ஒருவழியாக ரசிகர்களின் ஆசைக்கிணங்க சீரியல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டாம் பற்றிய பேச்சு இணையத்தில் தொடங்கியுள்ளது. அதாவது இந்த இரண்டாவது சீசனில் சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான ‘ரோஜா’ தொடரில் நாயகனாக நடித்த சிப்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது தற்போது இந்த தகவல் படுவைரலாகி வருகிறது.
View this post on Instagram