‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் உறுதியான மூன்றாவது கர்ப்பம்… அட இவருமா?… அதிர்ச்சியின் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடரில் கூட்டு குடும்பத்தை பற்றி கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த தொடர் பரபரப்பாகும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

   

இந்நிலையில் ஏற்கனவே முல்லை கர்ப்பமாக இருந்தார். இதனை வீடே  திருவிழா போல கொண்டாடியது. இதைத் தொடர்ந்து கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா கர்ப்பமானார். தற்பொழுது ஐஸ்வர்யா, முல்லையை தொடர்ந்து மூன்றாவதாக தனம் கர்ப்பமாக இருப்பது போல காட்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.

தற்பொழுது தனம் கர்ப்பமாக இருப்பதும் உறுதியாகி உள்ளது. நேற்றைய எபிசோடில் தனம் வாந்தி எடுத்த பொழுது, அவரை மீனா சந்தேகத்தில் பல கேள்விகள் கேட்டார். ஆனால்,  அதற்கு தனம் ஏதோ ஒரு பதிலை கூறி மழுப்பி விட்டார்.

இதைத் தொடர்ந்து சந்தேகப்பட்ட தனம், தனது அம்மாவிடம் தனது சந்தேகத்தை கேட்க அவரும் அவரது அம்மாவும் சேர்ந்து ஹாஸ்பிடலுக்கு சென்று செக் அப் செய்கின்றனர். இதில் தனம் கர்ப்பமாக இருப்பது உறுதியாகி உள்ளது.

தனத்திற்கு வயது அதிகம் என்பதால் ரிஸ்க் இருக்குமா? என அவர் குழம்பிப் போய் உள்ளார். டாக்டர் மாத்திரை கொடுத்து இரண்டு வாரங்கள் கழித்து வரும்படி கூறுகிறார். தற்பொழுது வீட்டில் உள்ள மூன்று பேருமே கர்ப்பம் என்பதை அறிந்த மீனா என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதோ அந்த ப்ரோமோ…