இந்த மனசு தான் சார் கடவுள்.. விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிய லாரன்ஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் செய்து வருகிறார்.

   

சமீபத்தில் KPY பாலாவுடன் இணைந்து அவர் செய்யும் அனைத்து உதவிகளிலும் லாரன்ஸின் பங்கு இருக்கிறது.

மே ஒன்றாம் தேதியிலிருந்து மாற்றம் ஆரம்பம் என்ற அமைப்பு மூலம் பல உதவிகளை செய்ய போவதாக லாரன்ஸ் ஏற்கனவே கூறியிருந்தார்.

முதற்கட்டமாக கஷ்டப்படும் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்சால் படித்த வாலிபர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யப் போகிறோம் என ஒரு வீடியோவை வெளியிட்டனர்.

அந்த வீடியோவை பார்த்த எல்.ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா, கேபி பாலா உள்ளிட்ட ஏராளமானோர் மாற்றம் என்ற சேவையில் இணைந்தனர்.

அவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்வோம் என கூறியிருந்தனர்.

இந்த நிலையில் லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் தான் வாங்கி 10 டிராக்டர்களை படம் பிடித்துள்ளார்.

மேலும் முதுகெலுமான விவசாயிகளுக்கு தனது சொந்த பணத்தில் டிராக்டர் வாங்கி பல கிராமங்களுக்கு சென்று கஷ்டப்படும் விவசாயிகளுக்கு தன் கையாலேயே டிராக்டர் வழங்கப் போவதாக லாரன்ஸ் கூறியுள்ளார்.

அவர் பதிவிட்ட மற்றொரு வீடியோவில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு டிராக்டரை வழங்கினார்.

அதில் முதலாவதாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு டிராக்டரை கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் லாரன்சை பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ragava Lawrence (@actorlawrence)