
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
காஞ்சனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பார்ட்டுகளை எடுத்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் தற்போது பென்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.
இப்படத்தை தொடர்ந்து ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்தாலும் ஏழை எளியோருக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். சினிமாவில் நடிக்க தொடங்கியது முதலே பல ஏழை எளிய குழந்தைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறார்.
கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பல குழந்தைகளுக்கு உதவி வாங்கி கொடுத்திருக்கின்றார். அண்மையில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்ப கலையை சிறப்பாக செய்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டிருந்தார்.
மேலும் அவர்களின் சிறப்பாக கலக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கு வாகனம் வாங்கித் தருவதாகவும் வீடு கட்டி தருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சொன்னபடி முதற்கட்டமாக மல்லர் கம்ப கலையில் கலக்கிய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு புது ஸ்கூட்டியை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதை பார்த்த மாற்றுத்திறனாளிகள் கண்கலங்கி நன்றி தெரிவித்தனர். கட்டாயம் வீடு கட்டி தருவேன் என்றும் ராகவா லாரன்ஸ் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Hi friends and fans, Two days ago in a press meet I mentioned that my physically abled boys performed Mallarkhambam so courageously. I’m extremely proud and happy to see their determination and hard work. I promised to provide them with bikes and build houses for them. As a first… pic.twitter.com/3iTO9spRIQ
— Raghava Lawrence (@offl_Lawrence) April 17, 2024