எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்யத் துணியாத செயலை செய்த நடிகர் சிவகார்த்திகேயன்…. அப்படி என்ன செய்தார் தெரியுமா?…

நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளரின் நஷ்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது தற்பொழுது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கடின உழைப்பால் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தார். இவர் தமிழில் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

   

அடுத்ததாக வெளியான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புனையாக அமைந்தது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து டாக்டர், டான் என இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ஹிட் அடித்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரிண்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் பல கோடிகள் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பிரின்ஸ் திரைப்பட  விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பாளருடன் இணைந்து சிவகார்த்திகேயனும் கொடுப்பதாக கூறியுள்ளாராம்.

தற்பொழுது பிரின்ஸ் திரைப்படத்தினால்  விநியோகஸ்தர்களுக்கு மொத்தம் ஆறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் பாதி பணத்தை சிவகார்த்திகேயன் நஷ்ட ஈடாக கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத செயலை சிவகார்த்திகேயன் செய்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளர் நஷ்டத்தில் முன்னணி ஹீரோ ஒருவர் பங்கு பெற்றுக் கொள்வது இதுவே முதல் முறை என்றும் சினிமா துறையினர் பாராட்டி வருகின்றனர்.