கணவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நடிகை ஜெனிலியா… இதுதான் காரணமா?… ரசிகர்களுக்கு கூறிய குட் நியூஸ் இதோ…

கணவர் ரித்தேஷ் முக்கும், நடிகை ஜெனிலியாவும் திரையுலகில் அறிமுகமாக 20 வருடங்கள் ஆனதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தற்போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இயக்குனர் சங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் தனது முதல் படத்தில் தனது ஜோடியாக நடித்த நடிகர் ரித்தேஷ்முக்கை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார்.

   

தற்பொழுது இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக திரையுலகை விட்டுவிலகி  குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருந்தார் நடிகை ஜெனிலியா. தற்பொழுது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் தன்னுடைய கணவர் நடித்த வேத் மராத்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜெனிலியாவும் அவரது கணவரும் ஹிந்தி திரை உலகில் அறிமுகமானது ஒரே படம் என்பதால் இந்த நட்சத்திர ஜோடி தற்பொழுது திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் முடிந்ததை தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி மும்பையில் கொண்டாடியுள்ளனர். இந்த அழகான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்….