தனது மனைவி ஸ்ரீதேவியுடன் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த போனி கபூர்… புகைப்படத்தை பார்த்து வருத்தத்தில் புலம்பும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் நீங்காத ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  1963ல்  தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.1976 இல் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உடன் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ஸ்ரீதேவி இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ விருதையும்’ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.இவர் திருமணத்திற்கு பின் நடிப்பதில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்து கொண்டார்.

பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின் இவர் நடித்த ஹிந்தி மற்றும் தமிழில் வெளியான ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 2017ல்  ‘மம்’ எனும் இந்தி திரைப்படத்தில் இவர் கடைசியாக நடித்தார். இது அவரது 300 வது திரைப்படம்.

நடிகை ஸ்ரீதேவி நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு திருமணத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருந்த அவர் பிப்ரவரி 24 – 2018ல் துபாயில் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் உயிரிழந்தார்.

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது.  கடந்த சில நாட்களாக நடிகை ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் மகள்கள் அவரைப் பற்றிய பதிவுகளை இணையத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் தனது மனைவி ஸ்ரீதேவியுடன் திருமண நிகழ்ச்சியில் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார் போனி கபூர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதோ அந்த வைரல் புகைப்படம்….