அது ரொம்பவும் கொடுமை…புருசன் வேணான்னு ஓடிருப்பேன்… ஓபன் டாக் செய்த தீபா சங்கர்..

சின்னத்திரை சீரியல் நடிகைகளின் மிகவும் பிரபலமானவர் நடிகை தீபா. இவர் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் முஹூர்த்தம், மலர்கள், கோலங்கள் ,மேகலா ,கார்த்திகைப்  பெண்கள். வாணி ராணி,மரகத வீணை போன்ற சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இவர் தமிழில் கிடாரி, கடைக்குட்டி சிங்கம், சில்லு கருப்பட்டி ,மண்டேலா ,ஏலே ,ருத்ராட் தாண்டவம் ,போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை தீபா சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.இவர் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறவில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் தீபா சமீபத்தில்  தனியார்  you tube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கல்யாணமாகி மூன்று நாட்களில் ஒவ்வொரு தங்க நகையாக தொலைக்க ஆரம்பித்து விட்டேன் அதனால் எனக்கு தங்க நகையே  போட வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். என்னை திருத்துவதற்கு என் கணவருக்கு இத்தனை வருஷம் ஆகிவிட்டது. இந்த Training Breed அது ரொம்பவும் கொடுமையா இருந்துச்சு  இன்னும் ஒரு கொஞ்ச நாள் கொடும படுத்தி இருந்தால் புருஷன் வேணான்னு  ஓடி இருப்பேன் என்று கூறியுள்ளார்.