திடீரென கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி… இதுதான் காரணமா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் தாடி பாலாஜி .இவர் நடித்த பல திரைப்படங்களில் தனது காமெடியின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தவர். இன்றளவும் நடிகர் தாடி பாலாஜியின் காமெடிக்கென்று ரசிகர்கள் கூட்டம் பெருமளவில் உள்ளது. நடிகர் தாடி பாலாஜி நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

   

இருவருக்கும் இடையை ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில் தற்போதும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா மாதவரம் அடுத்து பொன்னியம்மன்மேடு சாஸ்திரி மாதவரம் நகரில் தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவர் வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மணியின் காரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நித்யா சேதப்படுத்தி இருக்கிறார். தற்போது காரை சேதப்படுத்தியது யார் என்பதை அறிய வேண்டி மணி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

இதில் நித்யா தான் ஆசிரியர் மணியின் காரை சேதப்படுத்தியுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் மணி கொடுத்த புகாரின் பேரில் மாயவரம் போலீசார் நேற்று நித்யாவை அதிரடியாக கைது செய்தனர். இத்தகவல் தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவ ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வீடியோ இதோ…