இந்தியர்கள்னா அவ்ளோ கேவலமா..? பிரிட்டிஷ் காரரை அலறவிட்ட ரத்தன் டாடாவின் தாத்தா..!

மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர் ரத்தன் டாடா என்பது பலரும் அறிந்த விஷயம். மேலும் பிறருக்கு உதவ வேண்டும் என்று அவரின் சிறந்த பண்பு பலரையும் ஈர்த்தது. அது மட்டுமல்லாமல், இளைஞர்கள் பலரின் ரோல் மாடலாக இருக்கும் ரத்தன் டாட்டாவின் குடும்ப வரலாறு குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தெரிய வந்திருக்கிறது.

   

அதாவது ரத்தன் டாட்டாவின் தாத்தாவான, jemsetji tata ஒரு முறை பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றிருக்கிறார். பிரிட்டிஷ்காரர்கள் நடத்தும் அந்த ஓட்டலில், இந்தியரான இவரை உள்ளே அனுமதிக்க வில்லையாம். ஏனெனில் அந்த சமயத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டு வந்தனர்.

அதற்கு பழித்திருக்கும் வகையில், jemsetji tata 1903 ஆம் வருடத்தில் மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை கட்டி, தன்னை ஓட்டலுக்குள் அனுமதிக்காத பிரிட்டிஷ்காரருக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக வழங்குவதாக கூறி வேலைக்கு அழைத்துள்ளார்.

அவரும் இவ்வளவு பெரிய தொகை என்றால், கண்டிப்பாக மேனேஜர் பதவியாக தான் இருக்கும் என்று நினைத்து வந்திருக்கிறார். ஆனால், எந்த இந்தியரை உள்ளே விடாமல் தடுத்தாரோ, அதே இந்தியரின் ஓட்டலுக்கு வரும் அனைத்து இந்தியர்களையும் வரவேற்கும் பணியில் அமர்த்துவிட்டார் jemsetji tata.