நந்தாவில் நிறைவேறாத சூர்யாவின் ஆசை… இறுதியில் காக்க காக்க படத்தில் நடந்தது.. எப்படி தெரியுமா..?

ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் பாலாவின் திரைப்படங்களில் நடித்த பல ஹீரோக்கள் இன்று  முன்னணி நாயகர்களாக வலம் வருகிறார்கள். அதில் மிக முக்கியமானவர்கள், சியான் விக்ரம் மற்றும் சூர்யா. அந்த வகையில் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் மற்றும் நந்தா ஆகிய இரு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அந்த இரண்டு திரைப்படங்களும் அவரின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தது. இந்நிலையில், பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நந்தா திரைப்படத்தில் நடந்த நிகழ்வு குறித்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, நந்தா திரைப்படத்தில் நடிகை லைலாவோடு நடிக்க சூர்யாவிற்கு விருப்பமில்லை.

   

அவருக்கு பதிலாக ஜோதிகாவை நடிக்க வைக்கலாம் என்று பாலாவிடம் அமைதியாக சென்று கேட்டிருக்கிறார். அதற்கு பாலா, அதெல்லாம் முடியாது. ஈழத்துப் பெண்ணாக நடிப்பதற்கு லைலா தான் சிறப்பாக இருப்பார் என்று கூறிவிட்டாராம். மேலும், ஏதாவது லவ் பண்ணுகிறாயா? என்று கேட்டவுடன் சூர்யா எதுவும் கூறாமல் அமைதியாகிவிட்டாராம்.

அதன் பிறகு, நந்தா திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் காக்க காக்க திரைப்படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்து இருக்கிறார். அதில், சூர்யாவுடன் ஜோதிகாவை நடிக்க வைக்க அவர் ஒத்துக் கொண்டதாக செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.